தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்!

முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்!

முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்!


ADDED : டிச 31, 2010 03:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2010 03:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் அனுமன் தான். அவருக்கு சீதையைக் கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெற்றிக் களிப்பில் தேவியின் முன்னர் பணிந்து 'அம்மா!' என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் ''ஸ்ரீராமஜெயம்'' என்று எழுதிக் காண்பித்தார். அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள். முதன் முதலில் 'ஸ்ரீராமஜெயம்' மந்திரத்தை எழுதியவர் அனுமன் தான்! அன்று முதல் லிகித நாமஜெபம் என்ற பெயரில் ராமநாமாவை பனை ஒலைகளில், காகிதத்தில் எழுதும் வழக்கம் உண்டானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us