sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

/

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!


ADDED : மார் 27, 2023 08:52 AM

Google News

ADDED : மார் 27, 2023 08:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துப்புடையாரை அடைவதெல்லாம்

சோர்விடத்துத் துணையாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்

ஆனைக்கு நீ அருள் செய்தமையால்

எய்ப்பு என்னைவந்து நலியும் போது அங்கு

ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

அரங்கத் தரவணைப் பள்ளியானே!

நமக்கு தளர்ச்சியான முதுமை காலம் வரும். அதனால் நம்மை காப்பாற்றும் தகுதி படைத்தவர்களை சார்ந்து வாழ்வது உலக இயல்பு. ஆனால் அந்தக் காலம் வருவதற்குள் நமக்கு ஒரு கடமை இருக்கிறது என சொல்கிறார் பெரியாழ்வார்.

'பெருமாளே! நான் தகுதியற்றவனாயினும் உன்னையே சரணம் என்றடைந்தேன். ஏன் தெரியுமா? 'ஆதிமூலமே!' என்று ஓலமிட்ட யானையைக் காத்த கதையினை உலகமே அறியும். நோய் வந்து தாக்கி, நான் நலிவுறும் காலத்தில் உன்னை நினைக்கவும் சக்தியற்றவனாகி விடுவேன். எனவே, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்துவிட்டேன். ஸ்ரீரங்கத்தில் கண்வளரும் பெருமானே! அடியேனுடைய விண்ணப்பத்தை மறவாமல், நான் இறக்கும் காலத்தே வந்து எனக்கு அருள்புரிவீராக!' என்கிறார்.

எனவே நோய், முதுமை வருவதற்குள் நல்லதை செய்து, பெருமாளின் நாமத்தை சொல்லுங்கள். திவ்ய தேசங்களுக்கு சென்று புண்ணியத்தை தேடுங்கள்.






      Dinamalar
      Follow us