ADDED : மார் 27, 2023 08:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துணிகளால் ஆன சாமியானா பந்தல் அமைத்து அதன் கீழ் வைதிகமான ஜபம், ஹோமம் முதலிய நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
* ஒருவர் தன்னையும், தன் திறமையையும், பலத்தையும் அறிந்து வைத்துக் கொள்ளாமல் எந்த விஷயத்திலும் தலையிடுதல் கூடாது.
* பிறரால் செய்யப்படும் வருந்ததக்க செயல்களைப் பொறுத்துக் கொள்கிறவர்கள், அறிவுள்ளவர்களாக மதிக்கப்படுவர்.
* கழுத்து, மார்பு முழுவதையும் துண்டால் போர்த்திக் கொண்டு பூஜை, ஜபம், ஹோமம் செய்யக்கூடாது. மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டோ அல்லது இடது தோளில் இட்டுக் கொண்டு செய்யலாம்.
* கற்பும், அடக்கமும் மனைவிக்கு அழகைத் தருகின்றன. அவர்களுடைய நல்ல எண்ணத்தை எதிர்த்து நிற்க எவராலும் முடியாது.
* மந்திரங்கள் எதுவும் சொல்லாமல், அக்னி எரிய வேண்டும் என்பதற்காக அக்னியில் நெய் விடக்கூடாது.

