sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூலை 12, 2024 08:00 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 08:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரா.சாரதா, ஜன்பத், டில்லி.

* முன்னோர் சாபம் என்றால்...

முன்னோருக்கான சடங்கு, தர்ப்பணம், திதியைக் கொடுக்காவிட்டால் சந்ததியைப் பாதிக்கும். இதுவே முன்னோர் சாபம்.

ர.ராஜா, பந்தலுார், நீலகிரி.

*பல வாகனங்களில் சுவாமி வலம் வருகிறாரே...

எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். அவற்றின் மீது அன்பு காட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பா.குமாரசுவாமி, நல்லாத்துார், கடலுார்.

*காலசர்ப்ப தோஷம் என்றால் என்ன?

ஜாதகத்தில் ராகு, கேதுவிற்கு இடையே மற்ற கிரகங்கள் இருப்பது காலசர்ப்ப தோஷம். இதற்கு கோயிலில் பரிகாரம் செய்யுங்கள்.

ம.பார்க்கவி, திப்பசந்திரா, பெங்களூரு.

*பதவி உயர்வு பெற....

அனுமனுக்கு சனிக்கிழமையன்று துளசி அர்ச்சனை செய்து, வடைமாலை சாத்துங்கள்.

வி.சித்ரா, பரமக்குடி, ராமநாதபுரம்.

*ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிறார்களே...

ஒருவரின் ராசிக்கு ஒன்பதில் குரு வந்தால் துன்பம் விலகும். கஷ்டமான சூழலில் இருந்து தப்பும் போது இப்படிச் சொல்வர்.

பா.மங்கை, நடுவக்குறிச்சி, திருநெல்வேலி.

*தேங்காயை சிதறுகாயாக உடைப்பது ஏன்?

தேங்காயை உடைக்கும் போது அது நான்கு பக்கமும் சிதறும். அதுபோலவே தடைகள் விலக இதைச் செய்கிறோம்.

இ.ராசுக்குட்டி, வண்டலுார், செங்கல்பட்டு.

*இலையில் எப்படி பரிமாற வேண்டும்?

இனிப்பு, காய்கறி, சாதம் என இலையில் பரிமாற வேண்டும்.

த.பரமேஸ்வரன், தாடிக்கொம்பு, திண்டுக்கல்.

*சுபநிகழ்ச்சியில் கொடுத்த வெற்றிலையை பூஜைக்கு பயன்படுத்தலாமா?

பயன்படுத்தக் கூடாது. மரியாதை, கவுரவம் கருதி இதை கொடுக்கின்றனர்.

க.முருகராஜ், நாகர்கோவில், கன்னியாகுமரி.

*நவக்கிரக யாகத்தில் வெவ்வேறு நிறத்தில் வஸ்திரம் வைப்பது ஏன்?

ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்தில் இருப்பதால் பல நிறங்களில் வஸ்திரம் வைத்து பூஜிக்கிறோம்.

அ.புகழேந்தி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி.

*கண்ணாத்தாள், திரவுபதி -ஒரே பெண் தெய்வமா?

இல்லை. காளியின் அம்சம் கண்ணாத்தாள். பாண்டவரின் மனைவி திரவுபதி.






      Dinamalar
      Follow us