தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 21, 2021 05:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2021 05:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.பவித்ரா, பெங்களூரு

*பஞ்ச புராணம் என்றால் என்ன?

பூஜையின் போது அர்ச்சகர்கள் மந்திரம் ஜபித்ததும், ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகளைப் பாடுவர். அப்போது தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் ஒரு பாடல் வீதம் பாடுவதை பஞ்ச புராணம் என்பர்.

டி.அமுதா, நெய்வேலி

*விளக்கு வைத்த பிறகு துணி தைப்பது, துவைப்பது கூடாதா...

கூடாது. மாலையில் விளக்கேற்றி (5:30 - 7:30 மணி) வழிபாட்டில் ஈடுபடுங்கள்.

ஏ.சாவித்ரி, கோவை

*மயூரபந்தம் என்பதன் பொருள் என்ன?

யாப்பு இலக்கணத்தின்படி பாடல் அடிகளை குறிப்பிட்ட வடிவில் புலவர்கள் இயற்றுவர். இதில் மயில் வடிவில் இயற்றுவது மயூர பந்தம்.

ஏ.ராஜேஷ், சென்னை

*என் மகள் நாகதோஷத்தால் சிரமப்படுகிறாள். பரிகாரம் கூறுங்கள்.

ஞாயிறன்று ராகு காலமான மாலை 4:30 - 6:00 மணி அல்லது செவ்வாயன்று மதியம் 3:00 - 4:30 மணிக்குள் துர்கையை வழிபடுங்கள்.

எம்.வள்ளி, திருப்போரூர்

*கலி முற்றிப் போச்சு என்கிறார்களே...

கலிகாலத்தின் இயல்பு பற்றி தர்ம சாஸ்திரம் சொல்கிறது...

* கெட்ட வழியில் பணம் சம்பாதிப்பர்.

* நல்லவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாவர்.

* பருவ காலத்தில் மழை பெய்யாது.

* மழை இல்லாமல் நீர்நிலைகள் வற்றவும் செய்யும்.

இதுதான் கலிகாலத்தின் இயல்பு.

கே.வனஜா, திருநெல்வேலி

*கோயிலில் பக்தர்கள் தரும் உணவை வாங்கக் கூடாதாமே?

வாங்கலாம். பிரசாதம் என்ற நம்பிக்கையுடன் சாப்பிடுங்கள். எதிர்மறை எண்ணத்தை கைவிடுங்கள். நல்லதே நடக்கும்.

வி.நந்தினி, கன்னியாகுமரி

*வீட்டில் நவக்கிரக படம் வைத்து வழிபடலாமா?

வழிபடலாம். நவக்கிரக ஸ்லோகம் மட்டும் சொல்லலாம். மற்ற பரிகாரங்களை கோயிலில் செய்யுங்கள்.

ஆர்.கலாவதி, பரமக்குடி

*சுதர்சன ேஹாமம் நடத்துவது ஏன்?

மகாவிஷ்ணுவின் கையில் உள்ளது சுதர்சனம். இதற்கான ேஹாமம் நடத்தினால் எதிரி தொல்லை, நோய், மனக்குழப்பம், திருஷ்டி மறையும். வீடு அல்லது கோயில் மற்ற இடங்களில் நடக்கும் போது பங்கேற்றால் பலன் உண்டு.

எல்.மலர், கடலுார்

*வரலட்சுமி விரதமிருக்க மாமியார் அனுமதி பெற வேண்டுமா

அனுமதி பெற்று செய்வது குடும்பத்திற்கு நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us