sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 02, 2023 10:38 AM

Google News

ADDED : ஜூன் 02, 2023 10:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.ரவி, சிதம்பரம், கடலுார்.

*மனதில் நிம்மதி இல்லையே... என்ன செய்யலாம்?

தேவையற்ற பொருட்களால் வீடு குப்பையாகிறது. கூடாநட்பு, பேராசையால் மனம் குப்பையாகிறது. நிம்மதி வேண்டும் என்றால் குப்பையை துாக்கி எறியுங்கள்.

எம்.உஷா, திருநகர், மதுரை.

*அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?

எந்தக் கடவுளையும் வழிபடலாம். ஆசைகளைக் குறையுங்கள். அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழலாம்.

ஏ.சுந்தரராமன், வில்லிவாக்கம், சென்னை.

*கணவரின் விருப்பம் இல்லாமல் பீமரதசாந்தி நடத்தலாமா?

சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் ஆகியவையும் திருமணங்களே. இவற்றை தம்பதியராக சேர்ந்து நடத்துவதே முறை.

எம்.சீதாராமன், பணகுடி, திருநெல்வேலி.

*கடவுளிடம் நம் பிரார்த்தனைகளை எப்படி கேட்க வேண்டும்?

பிரார்த்தனைகளை உரிமையுடன் கேட்கலாம். கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. நமக்கு எது தேவையோ அதை அவர் தருவார்.

எஸ்.சுப்பிரமணியன், உடுமலைப்பேட்டை, திருப்பூர்.

*கோயிலில் கேட்பாரற்றுக் கிடக்கும் நந்தவனப் பூக்களை பூஜைக்கு உபயோகிக்கலாமா?

பூக்களை மாலையாகத் தொடுத்து அந்த கோயிலில் நடக்கும் பூஜைகளுக்குக் கொடுங்கள். உங்களுக்கு புண்ணியம்.

கே.நிவாஸ், கனகபுரா, பெங்களூரு.

*சரியை, கிரியை, யோகம், ஞானம் என்றால் என்ன?

பூஜைகளுக்கு உதவுதல் சரியை. பூஜை செய்தல் கிரியை. பிராணாயாமம் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடுதல் யோகம். இவற்றால் பெறப்படும் பக்குவமே ஞானம்.

எஸ்.ராஜாமணி, தென்தாமரைக்குளம், கன்னியாகுமரி.

*தினந்தோறும் விளக்குத் திரியை மாற்ற வேண்டுமா?

தேவையில்லை. முடிந்த வரை உபயோகிக்கலாம்.

எம்.செல்லம், வேடசந்துார், திண்டுக்கல்.

*சில ஆண்டாக குலதெய்வ வழிபாடு தடை பட்டுள்ளது. மீண்டும் தொடர என்ன வழி?

விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து விட்டு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

க.கோகிலா, சாந்தினிசவுக், டில்லி.

*சிறு கோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடத்த வேண்டும்?

காலை மட்டும் (ஒரு காலம்) அல்லது காலை, மாலை (இரு காலம்) பூஜை நடத்தலாம்.

எல்.பிச்சமுத்து, கடப்பேரி, செங்கல்பட்டு.

*விசேஷ வீடுகளில் வாழை, கரும்பு தோரணம் கட்டுவது ஏன்?

சுபநிகழ்ச்சிக்கு செல்லும் போது நாம் அலங்காரம் செய்து கொண்டு தானே செல்வோம். அது போலத்தான் வீடும். இது மங்கலத்தின் அடையாளம்.






      Dinamalar
      Follow us