sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 09, 2023 08:09 AM

Google News

ADDED : ஜூன் 09, 2023 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.கல்யாணராமன், திருத்தணி, திருவள்ளூர்.

*மந்திரம் ஜபித்தால் நல்லது நடக்குமா...

மந்திரங்களை லட்சம் முறை நம்பிக்கையுடன் ஜபித்தால் நல்லது நடக்கும்.

ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

*விளக்கில் எத்தனை முகம் ஏற்றலாம்?

பூஜையின் போது ஐந்தும், மற்ற நேரத்தில் ஒன்றும் ஏற்றுங்கள்.

ஒருமுகம் - மத்திம பலன் ஐந்து - செல்வ வளம்

கே.துரைராஜ், நெய்வேலி, கடலுார்.

*ஆரூடம், குறி, கைரேகை அடிக்கடி பார்க்கலாமா?

பார்க்க வேண்டாம்.

டி.பாலாமணி, ஏழுதேசம், கன்னியாகுமரி.

*விரதத்தன்று உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்கக் கூடாதாமே...

வெங்காயம், பூண்டு ஆகியவை காம, கோப உணர்வுகளைத் துாண்டும் என்பதால் விரதநாளில் சேர்ப்பதில்லை.

கே.பரந்தாமன், மணிமுத்தாறு, திருநெல்வேலி.

*அரிச்சந்திரன் போல யாரும் இருக்கிறார்களா... அவர்கள் ஏன் வெளியே தெரிவதில்லை?

தர்மம், நீதியை விட்டு விலகிச் செல்லும் கலியுகத்தில் இப்போது நாம் வாழ்கிறோம். இதனால் நல்லவர்கள் தங்களை வெளிப்படுத்துவதில்லை.

ர.முத்துராஜா, வாடிப்பட்டி, மதுரை.

*பெண்கள் தலைவிரி கோலமாக கோயிலுக்கு செல்லலாமா

செல்லக் கூடாது. தலைவிரி கோலம் என்பது அமங்கலம். பெண்கள் தலைவாரி, பூச்சூட்டி, குங்குமம் இடுவது அவசியம்.

எம்.சம்பத், ராமாபுரம், சென்னை.

*சண்டிகேஸ்வரர் சன்னதியை மட்டும் வலம் வரலாமா?

கூடாது. சண்டிகேஸ்வரரை தரிசித்து விட்டு, அதே வழியே திரும்பி வந்து பிரகாரத்தை வலம் வருவதே சரியானது.

ஜெ.சுபலட்சுமி, நெலமங்கலா, பெங்களூரு.

*பரிகாரத்திற்காக ஈர ஆடையுடன் அரசமரத்தைச் சுற்றி வருகிறேன். சரிதானா...

சுற்ற வேண்டாம். வழிபாடு உட்பட எந்த நல்ல விஷயத்திலும் ஈர ஆடை உடுத்தக் கூடாது.

எம்.பிரசன்னா, அவிநாசி, கோயம்புத்துார்.

*மனிதர்களிடம் அன்பு குறைந்து வருகிறதே...

வருந்த வேண்டிய விஷயம் இது. அன்பு இல்லாவிட்டால் மனம் பாலைவனம் போலாகி விடும். 'அன்பே தெய்வம்; அன்பே சிவம்' என போற்றுவதில் இருந்து இதன் பெருமையை உணரலாம்.

கே.குணசீலன், சாந்தினி சவுக், டில்லி.

*காம்பவுண்டு வீட்டில் குடியிருப்போர் சிலர் சரியாக தண்ணீர் வராததால் சாபமிடுகிறார்கள். வீட்டு உரிமையாளரை அது பாதிக்குமா?

அதர்மம் செய்தால் சாபம் பலிக்கும். குடியிருப்போருக்கு தண்ணீர் வசதி செய்து கொடுப்பது வீட்டு உரிமையாளரின் கடமை.






      Dinamalar
      Follow us