sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஜூன் 22, 2023 11:05 AM

Google News

ADDED : ஜூன் 22, 2023 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி.ஜெயசுதா, வடக்கிபாளையம் கோயம்புத்துார்.

*பெருந்தன்மையுடன் வாழ்வது எப்படி?

போட்டி பொறாமையின்றி இருத்தல் நமக்கானது நம்மை வந்தடையும் என நம்புதல் பணம், புகழ், பதவிக்காக அலையாதிருத்தல், அமைதி காத்தல் இவற்றை பின்பற்றினால் போதும்.

எல்.ஸ்ரீராம், வடமதுரை திண்டுக்கல்.

*சிவகீதை என்னும் நுால் இருப்பது உண்மையா...

பத்ம புராணத்தில் 16 அத்தியாயங்களில் 760 பாடல்களை கொண்டது சிவகீதை. ராமருக்கு உபதேசித்தவர் சிவபெருமான்.

எம்.கண்ணன், மேலுார், மதுரை.

*திருவிழாவின் போது கொடித்தடை என்கிறார்களே...

திருவிழாவுக்கு முன்பாக கோயிலில் காப்புக் கட்டுவர். இதன்பின் வெளியூர் செல்வதை தவிர்த்து வீதியுலா வரும் சுவாமியை தினமும் தரிசிக்க வேண்டும். இதை காப்புத்தடை அல்லது கொடித்தடை என்பார்கள்.

ஆர்.பார்கவி, கும்மிடிப்பூண்டி திருவள்ளூர்.

*கர்ப்ப கிரக வாசலில் துவார பாலகர் இருப்பது ஏன்?

கடவுள் ஒருவரே என்பதை உணர்த்தும் விதத்தில் சன்னதியின் வலப்புறம் உள்ளவர் ஆள்காட்டி விரலை நீட்டியபடி இருப்பார். இடப்புறம் உள்ளவர் சன்னதிக்குள் செல்ல அனுமதிக்கும் விதமாக கைகாட்டியபடி நிற்பார்.

கே.சங்கரி, ஜனக்புரி, டில்லி.

*திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதன் நோக்கம் என்ன?

உலக நலனுக்காக கோயில்களில் அன்றாட விழாக்கால பூஜைகள் சரிவர நடப்பது அவசியம். இதற்கு உதவி புரியும் கட்டளைதாரர்களுக்கு மரியாதையுடன் பிரசாதம் அளிப்பதே பரிவட்டம்.

சி.பிருந்தா, சென்னபட்னா பெங்களூரு.

*வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிடுவது ஏன்?

வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிட்டால் வீட்டுக்குள் தெய்வீக சக்தி வரும். இது கிருமி நாசினியும் கூட.

பி.கஜேந்திரன், பண்ருட்டி கடலுார்.

*காலையில் விழித்ததும் உள்ளங்கையைப் பார்ப்பது நல்லதாமே...

தேவியரான பார்வதி லட்சுமி, சரஸ்வதி மூவரும் நம் உள்ளங்கைகளில் இருக்கின்றனர். காலையில் விழித்ததும் இவர்களை முதலில் நினைத்தால் நல்லதாக அமையும்.

வி.கவுரிபிரசாத் களியக்காவிளை கன்னியாகுமரி.

*யாரிடம் எல்லாம் இரக்கப்பட வேண்டும்?

பெற்றோர், மனைவி குழந்தைகள், முதியவர்கள் நோயாளிகள், ஆதவற்றோர் பசுக்களிடம் இரக்கப்படுவது அவசியம்.

கே.நந்தினி, வள்ளியூர் திருநெல்வேலி.

*பள்ளிப்படை கோயில் என்றால் என்ன?

போரில் வீரமரணம் அடைந்த மன்னர், தளபதி படைவீரர்களின் நினைவாக கட்டப்படுவது பள்ளிப்படை கோயில்.






      Dinamalar
      Follow us