
கே.பாமா, ரஜோரி கார்டன், டில்லி.
*விரதத்தன்று பகலில் துாங்கலாமா...
கூடாது. பகலில் துாங்காமல் கடவுள் சிந்தனையுடன் இருக்கவே விரதம் இருக்கிறோம்.
சி.கருப்பையா, பணகுடி, திருநெல்வேலி.
*சன்னதி முன் ஏற்கனவே ஏற்றிய விளக்கை நான் பயன்படுத்தலாமா?
ஏற்றிய விளக்கை பயன்படுத்தலாம். பரிகாரத்திற்காக ஏற்றினால் புதிய விளக்கை பயன்படுத்துங்கள்.
எம்.ராகவி, திருப்பனாம்பாக்கம், கடலுார்.
*ஆஷாட நவராத்திரி என்றால் என்ன?
ஆனி மாத அமாவாசைக்கு மறுநாள் முதல்
ஒன்பது நாளும் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். இது வராகியம்மனுக்கு ஏற்றது.
எல்.பவித்ரா, ஜவ்வாதுபட்டி, திண்டுக்கல்.
*பத்ரகாளி, பிரத்யங்கிரா, வராகியை வழிபட ஏற்ற
நாள் எது?
பத்ரகாளி - வெள்ளி
பிரத்யங்கிரா - அமாவாசை
வராகி - வளர்பிறை பஞ்சமி திதி
எஸ்.பவானி, மாதவரம், சென்னை.
*முளைப்பாரியை வீட்டில் வளர்த்து கோயிலில் செலுத்தலாமா?
செலுத்தலாம். அசைவத்தை தவிர்ப்பதும், தீட்டு சமயத்தில் ஒதுங்கியிருப்பதும் அவசியம்.
கே.நாகராணி, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி.
*எரியும் சூடம், தீபத்தை வாயால் ஊதக் கூடாதா?
கூடாது. வாயால் ஊதினால் எச்சிலாகி விடும். புனிதமான பூஜைப்பொருட்களை அப்படி செய்யலாமா...
எல்.கணேசன், ராமநாதபுரம், கோயம்புத்துார்.
*பஞ்ச வாத்தியம் என்றால் என்ன?
கோயில்களில் ஐந்து வகை இசைக்கருவிகள் இருக்கும். இதை சுவாமி புறப்பாட்டின் போது இசைப்பர்.
* தோல் - மேளம், மத்தளம்
* துளை - நாதஸ்வரம், புல்லாங்குழல்
* நரம்பு - யாழ், வீணை
* உலோகம் - எக்காளம், கொம்பு, திருச்சின்னம்
* இயற்கை - சங்கு, ஜலதரங்கம்.
எம்.வனஜா, கனகபுரா, பெங்களூரு.
*தீட்டுக்காலத்தில் கட்டிலில் படுக்கலாமா?
படுக்கலாம். அப்போது உபயோகித்த அனைத்து துணிகளையும் தீட்டு கழிந்ததும் நீரில் நனைத்து உலர்த்துவது அவசியம்.
எம்.மாணிக்கவல்லி, சோழவந்தான், மதுரை.
*எங்கள் குடும்பத்தினருக்கு முன்னோர் ஆசி கிடைக்க...
தர்ப்பணம், திதி, சிராத்தம் கொடுப்பது முன்னோரின் ஆசி பெறுவதற்காகவே. அதனால்தான் அவர்களின் பெயரை குழந்தைகளுக்கு வைக்கிறோம்.

