sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மகிழ்ச்சியும் மனதை தழுவட்டுமே! அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே!

/

மகிழ்ச்சியும் மனதை தழுவட்டுமே! அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே!

மகிழ்ச்சியும் மனதை தழுவட்டுமே! அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே!

மகிழ்ச்சியும் மனதை தழுவட்டுமே! அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே!


ADDED : மே 22, 2020 06:32 PM

Google News

ADDED : மே 22, 2020 06:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருஞான சம்பந்தர் தேவாரத்தை தினமும் பாடுங்கள்



மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்

கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்

தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்

காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்

பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

தொண்டணை செய்தொழில் துயர் அறுத்து உய்யலாம்

வண்டணைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்

கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்

பெண்துணை யாகவோர் பெருந்தகை இருந்ததே.

அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே

நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடுங்

கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்

பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே.

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே

விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழுங்

கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்

பெடைநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல

கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்

சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்

பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே.

குறைவளை அதுமொழி குறைவொழி நெஞ்சமே

நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடுங்

கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்

பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே.

அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட

நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே

கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்

பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே.

நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர்

அடியொடு முடியறியா அழல் உருவினன்

கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்

பிடிநடை யவளொடும் பெருந்தகை இருந்ததே.

தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்

ஆருறு சொற்களைந்து அடியிணை அடைந்துய்ம்மின்

காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்

பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே.

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்

பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்தனை

அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்

விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.






      Dinamalar
      Follow us