
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஞ்ஞான வல்லிருள் போய் அன்பர்குணக் குன்றின்மிசை
மெய்ஞ்ஞான பானுவெளி தோன்றச் - செஞ்ஞான
நாதத் தொனி கூவும் நற்கொடிப் போரூரன் இரு
பாதத்தை நெஞ்சே பணி.
பொருள்: அறியாமை என்னும் இருளை நீக்குபவனே! பக்தர்களை குணக்குன்றாக விளங்கச் செய்பவனே! எங்கும் அறிவுச்சுடரை பரவச் செய்பவனே! கொக்கரக்கோ என்னும் உயர்ந்த ஞான நாதத்தை கூவி அழைக்கும் சேவலைக் கொடியாக பெற்றவனே! திருப்போரூர் முருகனே! உன் திருவடியை என் நெஞ்சம் வணங்குகிறது.

