
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
(அபிராமிபட்டர் பாடிய அபிராமி அந்தாதி பாடல்)
பொருள்: கொடி போன்றவளே! இளமை மிக்கவளே! பூங்கொம்பே! மணம் நிறைந்த பரிமளமே! உரிய காலத்திற்கு முன்பே பக்குவமாக கனியச் செய்தவளே! வேதநாயகியே! பனி சூழ்ந்த இமயமலையில் வாழும் பெண் யானையே! பிரம்மன் உள்ளிட்ட தேவர்களைப் பெற்ற அன்னையே! என்னை பிறவிப்பிணியில் இருந்து காத்தருள்வாயாக.