
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துன்பே தரும் சூன்யம் வம்பு பகை
புன்பேய் பல பூதகணங்கள் எல்லாம்
நின்பேர் சொல நீறு படும் படுமே
அன்பே புரி அஞ்சனை அம்சுதனே.
(அனுமார் அனுபூதி பாடல்)
பொருள்: ஆஞ்சநேயரே! துன்பம் தரும் சண்டை சச்சரவு, பூதம், பேய் போன்றவற்றால் ஏற்படும் பயம் ஆகியவை உமது பெயர் சொன்னால் சாம்பலாகி விடும். அஞ்சனையின் அழகான புதல்வனே! உமது அன்பை என் மீது பொழிவீராக.