
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியே
ஆலவாய் க்ஷேத்திர ஒளியே உமையே
வருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயே
வைகைத் தலைவியே சரணம் தாயே
பொருள்: அருளாகிய மழையினை பொழியச் செய்கின்ற ஒளிபொருந்திய விழிகளைக் கொண்டவளே! மதுரையில் அருள்புரியும் மீனாட்சியே! வருகின்ற தீவினைகளைப் போக்கிடும் உலகநாயகித் தாயே! வைகை நதிக்கரையில் அருளாட்சி செய்யும் தலைவியே! உன்னைச் சரணடைகிறேன்.