
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓயாத அரக்கன் ஒடிந்து அலற
நீயார் அருள் செய்து நிகழ்ந்தவனே
வாயார வழுத்துவர் நாகேச்சரத்
தாயே என வல்வினை தானறுமே.
பொருள்
கயிலை மலையால் நெருக்கி ராவணனை அலறச் செய்தவர் சிவபெருமான், அவனது இனிய இசை கேட்டு உயிர் பிழைக்கச் செய்தார். அதுபோல திருநாகேஸ்வரத்தில் வசிக்கும் சிவனை வாயாரப் பாடிப் புகழ்ந்து தரிசித்தால், நம் பாவவினைகள் தானாகவே ஓடிவிடும்.