ADDED : ஜூன் 12, 2020 01:07 PM

* விநாயகர் தவிர மற்ற தெய்வங்களுக்கு தோப்புக் கரணம் இடக் கூடாது.
* நீண்ட காலமாக பூஜித்த சாளகிராமம், பாண லிங்கங்களை பூஜிக்க முடியவில்லை என பிறருக்கு கொடுக்கக் கூடாது.
* கிழக்கு, வடக்கு தவிர மற்ற திசை நோக்கி விளக்கு பூஜை, ேஹாமம், தர்ப்பணம் செய்யக் கூடாது.
* அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதோ, முடி வெட்டுவதோ கூடாது.
* பக்தி இல்லாத அறிவு அர்த்தமற்றது. பக்தி இல்லாமல் மேற்கொள்ளும் விரதம் பலனளிக்காது.
* குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளிடம் கோபத்தைக் காட்டுவது மிக தவறான செயல்.
* சாப்பிடும் திசையைப் பொறுத்து பலன் மாறுபடும்.
கிழக்கு - நீண்ட ஆயுள்
மேற்கு - செல்வம்
தெற்கு - புகழ்
வடக்கு - நோய்.
* பக்தி, ஒழுக்கமுடன் வாழக் கற்றுத் தருவதே குழந்தைகளுக்குரிய ஆரம்பக்கல்வியாக இருக்க வேண்டும்.
* சனீஸ்வரரின் படம், விக்ரகத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வது கூடாது.
* வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமையில் பாலை வீணாக்கினால் தரித்திரம் வரும்.
* கோயிலில் கொடி மரம் அருகிலுள்ள பலிபீடத்தை தொடுவதோ, மிதிப்பதோ கூடாது.