
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னங் கடுக்கை முடிவேய்ந்த
புனிதற்கு அமைக்கும் பொருளின்றி
மின்னுங் கவனாடைகள் பிறவும்
வேறு தனக்கென்று அமையாமே
மன்னுந் தலைவன் பூசனையின்
மல்கும் பயனை அடியார்கள்
துன்னும்படி பூசனைகொள்ளும்
தூயோன் அடித்தாமரை தொழுவாம்.
பொருள்: பொன் நிறமான கொன்றைப்பூ சூடிய சிவனுக்குஉரிய மலர்கள், ஆடைகளை மட்டும் ஏற்பவரே! மற்ற பொருள்களை விரும்பாதவரே! தனக்கு கிடைக்கும் சிவதரிசன பலனை, அடியவர்களுக்கு அருள்பவரே! தூய்மை மிக்க சண்டிகேஸ்வரரே! உம் பாதமலர்களைத் துதிக்கிறோம்.