தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஏப் 25, 2014 01:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2014 01:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தண்ணார் திங்கள் பொங்கு அரவம் தாழ்புனல் சூடிப்

பெண் ஆண் ஆயபேர் அருளாளன் பிரியாத

கண்ணார் கோயில் கைதொழு வோர்கட்கு இடர்பாவம்

நண்ணா ஆகும் நல்லினை யாய நல்குமே.

பொருள்: குளிர்ந்த நிலவு, பாம்பு, பெருகியோடும் கங்கை ஆகியவற்றை சூடிய சிவனே! அம்மையப்பராக விளங்கும் அருளாளனே! கை கூப்பி வணங்குவோரின் பாவத்தை போக்கி நன்மையை அருள்பவனே! கண்ணார்கோயில் என்னும் குறுமாணக்குடியில் வீற்றிருப்பவனே! அருள்புரிவாயாக.

குறிப்பு: வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் கண்ணார்கோயில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us