
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்- வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழிப்படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை
பொருள்: விண்ணுலக தேவர்கள் வணங்கும் மலை திருவேங்கடம் (திருப்பதி). உண்மையான பக்தியால் வழிபடும் அடியார்களின் தீவினைகளைத் தீர்க்கும் மலையும் அதுவே. அசுரர்களை அழிக்கவும், தேவர்களைக் காக்கவும் திருமால் சக்ராயுதம் தாங்கி நிற்கும் கோயிலும் திருவேங்கடமே.