sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி!

/

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மே 26, 2015 10:46 AM

Google News

ADDED : மே 26, 2015 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏறுமயிலேறி விளையாடும் முகம் ஒன்றே

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்குமுகம் ஒன்றே

குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

வள்ளியை மணம் புணர வந்தமுகம் ஒன்றே

ஆறுமுக மான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதியரு ணாசலம் அமர்ந்த பெருமாளே.

பொருள்: ஆதிதலமாக விளங்கும் அண்ணாமலையில் வீற்றிருக்கும் முருகனே! மயில் வாகனத்தில் ஏறி

விளையாடுபவரே! சிவனுக்கு ஞான உபதேசம் செய்தவரே! பக்தர்களின் முன்வினையைத் தீர்த்தருள்பவரே! கிரவுஞ்ச கிரியை வேலாயுதத்தால் அழித்தவரே! அசுரர்களை வதம் செய்தவரே! வள்ளியைக் காதல் மணம் புரிந்தவரே! முருகப்பெருமானே! ஆறு முகங்களினால் அருள் புரிந்ததை எல்லாம் எனக்கும் தர வேண்டும்.

குறிப்பு: அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்.






      Dinamalar
      Follow us