
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவி யோமமாகும் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
பொருள்: கற்பனைக்கு எட்டாத ஜோதி வடிவானவரே! கருணை மிக்கவரே! அற்புத அழகு கொண்டவரே! அரிய வேதங்களால் தாங்கப்படுபவரே! சிற்றம்பலமாகிய தில்லையில் வீற்றிருப்பவரே! பொன்னம்பலத்தில் நடனம் புரிபவரே! உமது மலர்ப் பாதத்தை போற்றி வணங்குகிறேன்.
குறிப்பு: சேக்கிழாரின் பெரியபுராணத்தில் உள்ள பாடல்