ADDED : செப் 10, 2021 09:41 AM

துர்வாரோ தேஹமோஹோ யதி புனர துனா தர்ஹி நிரஷேஷ ரோகான்
ஹ்ருத்வா பக்திம் த்ரடிஷ்டாம் குருதவ பங்கேருஹே பங்கஜாக்ஷ I
நுானம் நானா பவாந்தே ஸமதிகத மிமம் முக்திதம் விப்ரதேஹம்
க்ஷுத்ரே ஹாஹந்தமாமா க்ஷிபவிஷயரஸே பாஹிமாம் மாருதேஷ II
சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை சேவித்து
உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்க்கும் உண்ணும் குலத்தில் பிறந்தும் நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம்
உமக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை
நம் காமங்கள் மாற்றேலோ எம்பாவாய்
என ஆண்டாள் பாசுரத்தில் கூறியபடி பட்டத்ரியும் உடலில் இருந்து நோயை நீக்கியவுடன் வேறு எந்த காமத்திலும் ஈடுபடாமல் எம்பெருமாளிடம் திடமான பக்தியைக் கேட்கிறார். இந்த ஸ்லோகத்தினை கூறுவதால் நமக்கு எப்போதும் கடவுளின் மீது பக்தி உண்டாகும்.
- எல்.ராதிகா, திருச்சி
radhu_g16@yahoo.co.in
