sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

துணிந்து நில்... தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி ! - கர்ஜிக்கிறார் வீரத்துறவி

/

துணிந்து நில்... தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி ! - கர்ஜிக்கிறார் வீரத்துறவி

துணிந்து நில்... தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி ! - கர்ஜிக்கிறார் வீரத்துறவி

துணிந்து நில்... தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி ! - கர்ஜிக்கிறார் வீரத்துறவி


ADDED : ஜூலை 03, 2010 05:00 AM

Google News

ADDED : ஜூலை 03, 2010 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*  உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால், எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்

கூடாது.

*  ஒருவரிடம் அன்பு இருக்குமானால் அவரால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. தன்னலத்தை மறந்து பொதுநலம் கொண்டவராக ஒருவர் இருந்தால் அவரை எதிர்க்கும் சக்தி ஒன்றுமில்லை.

*  இயற்கையை வெல்வதற்காகவே நாம் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். பணிந்து போவதற்காக அல்ல.

தி அறிவுச் சுரங்கத்தை திறக்கவல்ல சக்தி மனஒருமைப்பாட்டுக்கு உண்டு. பலவீனமான மனம் கொண்டவர்கள் வாழ்வில் துன்பத்தை அடைந்து அல்லல்படுகிறார்கள்.

* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந் தத்தைக் கொண்டு வந்தே தீரும்.

*  கற்பு என்பது ஆண், பெண்  இருபாலருக்கும் இருக்கவேண்டிய நன்னெறியாகும்.

*  சுதந்திரமாகச் செய்யும் செயல்களே நேர்த்தியாக அமையும். அதனால் எந்தச்செயலையும் ஒரு எஜமானனைப் போல அணுகுங்கள்.

*  "ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இரு. ஆனால், வேலைகளில் சிக்கிக் கொள்ளாதே' என்ற கீதையின் உபதேசத்தைப் பின்பற்றி வாழுங்கள்.

* வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், ஞானம் தான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.

*  துணிந்து நில்லுங்கள், தொடர்ந்து செல்லுங்கள். பலம் கொண்டவராக வீறுநடை போடுங்கள். முழுப்பொறுப்பையும் உங்கள் மீதே சுமத்திக் கொள்ளுங்கள். தைரியமாய் இருங்கள். உங்களை தோல்வி எட்டிப் பார்க்காது.

*  உங்கள் சொந்தவிதியைப் படைத்தவர் நீங்களே என்பதை உணருங்கள். உங்களுக்கு வேண்டிய முழுப்பலமும், துணிவும் உங்களுக்குள்ளே தான் இருக்கின்றன என்பதை  உணருங்கள்.தி எல்லா உயிரினங்களிலும் மனிதப்பிறவியே மகத்தானது. தேவதூதர்களைக் காட்டிலும் மனிதர்கள் உயர்ந்தவர்கள்.

* வாழ்வில் லட்சியம் ஒன்றைக் கொண்டிருங்கள். லட்சியம் கொண்டவன் ஆயிரம் பிழைகளைச் செய்வான் என்றால் லட்சியம் இல்லாதவன் ஐயாயிரம்  பிழைகளைச் செய்வான் என்பதை உணருங்கள்.

*  உழைப்பும், உறுதியும் மிக்க சிங்கம் போன்ற  இதயம் படைத்த ஆண்மகனுக்குத் தான் திருமகளின் அருள் கிடைக்கும்.

*  வழிபாட்டிற்குரிய ஒரே  கடவுள் மனிதனே. எல்லா உயிர்களும் கோயில்கள் என்பது உண்மை தான். ஆனால், அனைத்திலும் உயர்ந்த கோயில் மனிதன் தான்.






      Dinamalar
      Follow us