ADDED : ஜூலை 30, 2010 10:19 AM
1. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
2.கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் உற்சவம்....
பிரம்மோற்ஸவம்
3. கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்த வேண்டும்?
12 ஆண்டுகள்
4. ஆதிசங்கரரின் தாயார் பெயர்...
ஆர்யாம்பாள்
5. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை
6. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்
7. தேய்பிறையில் வரும் சதுர்த்தியை எப்படி குறிப்பிடுவர்?
சங்கடஹர சதுர்த்தி
8.தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் மாதம்...
ஆடி
9. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர்....
மருள்நீக்கியார்
10. பன்னிருதிருமுறைகளில் முருகன் மீது பாடப்பட்ட பாடல்...
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை