ADDED : ஏப் 24, 2020 09:32 AM

* தீபாவளியை தவிர மற்ற நாட்களில் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய்க் குளியல் கூடாது.
* தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்ட பால், வெண்கல பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீர் குடிக்கக் கூடாது.
* இரவில் இருட்டில் அமர்ந்து உண்பது கூடாது.
* காலையில் பால் சோறு, இரவில் எள் கலந்த சோறு சாப்பிடக் கூடாது.
* வடக்கு நோக்கி தலையும், தெற்கு நோக்கி காலையும் நீட்டி துாங்கக் கூடாது.
* புழுங்கல் அரிசியால் சமைத்த உணவுகளை தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யக் கூடாது.
* செவ்வாய்க்கிழமையில் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
* இலையில் பரிமாறும் போது உப்பை மட்டும் கையால் பரிமாறக் கூடாது.
* ஆண்டு தோறும் பிறந்த நாளை தமிழ் மாத நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுவது நல்லது.
* ஏகாதசி, சஷ்டி, கார்த்திகையன்று விரதம் இருந்தால் எலுமிச்சைச்சாறு, மோர் குடிப்பதை தவிர்க்கவும். (இது விரத பலனை குறைக்கும்)