ADDED : ஆக 27, 2021 05:17 PM

* குழந்தை வரம் வேண்டி தேவர்களின் தாயான அதிதி விரதமிருந்தார். அதற்கு பயோவிரதம் என்று பெயர்.
* அதிதி, கஷ்யப முனிவர் தம்பதிக்கு பிறந்தவர் வாமனர்.
* வாமனர் என்பதற்கு 'குள்ளமானவர்' என்பது பொருள்.
* 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என வாமனரை போற்றும் நுால் திருப்பாவை.
* வாமனருக்கு 'உபேந்திரன்' (இந்திரனின் தம்பி) என்றும் பெயருண்டு.
* மகாபலி நடத்திய யாகத்தின் பெயர் விஸ்வஜித்.
* மகாபலி யாகம் நடத்திய இடம் நர்மதை நதிக்கரை.
* தானம் கொடுத்த மகாபலிக்கு மகாவிஷ்ணு வழங்கிய பதவி இந்திர பதவி.
* மகாபலியின் மனைவியின் பெயர் விந்தியாவளி.
* வியாழக்கிழமையில் வாமனரை வழிபட்டால் குருதோஷம் நீங்கும்.
* கருவில் வளரும் போதே விஷ்ணு பகவானின் பக்தனாக இருந்தவர் மகாபலியின் தாத்தா பிரகலாதன்.
* வாமனருக்கு தானம் அளிப்பதை தடுக்க வண்டாக வந்தவர் சுக்கிராச்சாரியார்.
* திருவடியால் உலகளந்த மகாவிஷ்ணுவின் திருவடி பூலோகம் தாண்டி சத்தியலோகத்தை அடைந்தது.
* சத்தியலோகத்தில் மகாவிஷ்ணுவின் திருவடிக்கு அபிஷேகம் செய்தவர் பிரம்மா.
