ADDED : செப் 13, 2021 04:22 PM

* ஆண்டாளின் சகோதரராக கருதப்படுபவர் ராமானுஜர்.
* விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகமங்கள் பாஞ்சராத்ரம், வைகானஸம்
* வைகுண்டத்தில் எல்லையில் ஓடும் நதியின் பெயர் விரஜா
* ஸ்ரீவைகுண்ட கத்யம் என்னும் நுால் வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கிறது.
* ராவணனிடம் இருந்து சீதையை விடுவிக்க போராடி உயிர் நீத்தவர் ஜடாயு
* பத்ரி நாராயணன் என்பதற்கு இலந்தையடிப் பெருமாள் என்பது பொருள்.
* ஆச்சாரியார்கள் வழிபட்ட கோயில்களை அபிமானத்தலம் எனக் குறிப்பிடுவர்.
* நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர் நாத முனிகள்.
* திருஞான சம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர் திருமங்கையாழ்வார்.
* துாதுவளைக்கீரை மூலம் ஆளவந்தாருக்கு துாது அனுப்பியவர் மணக்கால்நம்பி.
* திருவிளையாடல் புராணத்தை தமிழில் எழுதியவர் பரஞ்ஜோதி முனிவர்
* திருவிளையாடல் புராணத்தின் மூல நுால் ஹாலாஸ்ய மகாத்மியம்
* திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்த பெண் மங்கையற்கரசி
* ஆறு படைவீடுகளில் நான்காம் தலம் சுவாமிமலை.
