ADDED : அக் 11, 2021 02:57 PM

* பாலை நிலத்திற்கு உரிய தெய்வம் கொற்றவை அல்லது காளி.
* துர்கையம்மனுக்கு 'ஸ்கந்த மாதா' என்றும் பெயருண்டு. இதன் பொருள் முருகனின் தாய்.
* திருவேற்காடு கருமாரியின் உக்கிரத்தை தணித்தவர் ஆதிசங்கரர்.
* காளி, மாரியம்மனை அக்கா, தங்கையாக கருதி வழிபடுவர்.
* அம்பிகையின் திருநாமமான சாகம்பரி என்பதற்கு 'தாவரங்களைக் காப்பவள்' என்பது பொருள்.
* கங்கையில் பார்வதி நீராடிய போது அவளது காதணி விழுந்த இடம் மணிகர்ணிகா கட்டம்.
* மகாகவி காளிதாசர் முதன் முதலில் இயற்றிய பாடல் சியாமளா தண்டகம்.
* கேரளத்தில் பகவதியாக வணங்கப்படும் பெண் தெய்வம் கண்ணகி.
* மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்ட பெயர் தடாதகை பிராட்டியார்.
* வடக்கு நோக்கி இருப்பதால் வடக்கு வாசல் செல்வி என காளியை அழைப்பர்.
* மகமாயி என்பதற்கு மகிமை நிறைந்தவள் என்பது பொருள்.
* நவராத்திரியின் போது நடத்தப்படும் ஹோமம் மகா சண்டி ஹோமம்.
* அர்ச்சகர் புடவை கட்டியபடி சிவனை பூஜிக்கும் தலம் திருச்சி திருவானைக்காவல்
* வள்ளலாருக்கு அண்ணியாக வந்து உணவளித்தவள் திருவொற்றியூர் வடிவுடையம்மன்.
* மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகையை போற்றும் பாடல் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்.
* புரட்டாசியில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.
