ADDED : அக் 21, 2021 05:31 PM

* சிவனுக்குரிய கிழமை விரதம் சோமவாரம் என்னும் திங்கட்கிழமை விரதம்.
* சீர்காழியில் அவதரித்த சிவனடியார் திருஞான சம்பந்தர்.
* கருவறையில் உள்ள சுவாமி சிலையையும் பீடத்தையும் இணைக்கும் மருந்தை அஷ்ட பந்தனம் என்பர். இந்த கலவையில் கொம்பரக்கு, சுக்கான் துாள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் இடம் பெற்றிருக்கும்.
* கருடனின் அம்சமாக பிறந்த ஆழ்வார் பெரியாழ்வார்.
* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அருள்புரிபவர் பொலிந்து நின்ற பிரான்.
* புளியமரத்தடியில் வீற்றிருக்கும் ஆழ்வார் நம்மாழ்வார். இந்த மரத்தை புளியாழ்வார் என்றே குறிப்பிடுவர்.
* தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் விப்ர நாராயணர்.
* திருக்கடல்மல்லை எனப்படும் திவ்யதேசம் மகாபலிபுரம்.
* கந்தசஷ்டி கவசத்தை பாடியவர் தேவராய சுவாமிகள்.
* காயத்ரி மந்திரம் 24 எழுத்துக்களால் ஆனது
* கிருஷ்ணரின் சகோதரியின் பெயர் சுபத்ரை
* சைவ சமயத்தின் முதல் குருவாக போற்றப்படுபவர் நந்தி தேவர்.
* அசோக வனத்தில் சீதைக்கு உதவிய அரக்கி திரிசடை. இவள் ராவணனின் தம்பியான விபீஷணனின் மகள்.
* மூகாசுரனை வதம் செய்தவள் மூகாம்பிகை. கர்நாடக மாநிலம் கொல்லுாரில் கோயில் கொண்டிருக்கிறாள்.
