தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 29, 2021 02:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 02:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாக பிறந்தவர் பொய்கையாழ்வார்.

* பூமிதேவியின் அம்சமாக பிறந்த பெண் ஆழ்வார் ஆண்டாள்.

* மகாவிஷ்ணுவின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்

* நம்மாழ்வரை குருநாதராக ஏற்றவர் மதுரகவியாழ்வார். இவரால் பாடப்பட்ட பாடல் கண்ணிநுண் சிறுதாம்பு.

* திருப்பதியில் ஏழுமலையான் முன் படியாக இருப்பவர் குலசேகராழ்வார்.

* ஸ்ரீரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார் திருப்பாணாழ்வார்.

* சிவத்தலங்களில் 'கோயில்' என்றால் அது சிதம்பரத்தை குறிக்கும்.

* கைலாயத்தில் சிவதரிசனத்திற்கு அனுமதிப்பவர் நந்திதேவர்.

* சிவ சின்னங்களில் முதலிடம் வகிப்பது திருநீறு.

* ருத்ராட்சம் என்பதன் பொருள் சிவனின் கண்.

* காளை மாடு சிவனை பூஜித்த தலம் திருவையாறு.

* தேவர்கள் சிவராத்திரியன்று வழிபடும் திருக்கோலம் லிங்கோத்பவர்.

* மதுரையில் சித்தராக எழுந்தருளியவர் சுந்தரானந்தர். 'எல்லாம் வல்ல சித்தர்' என்றும் இவரை அழைப்பர்.

* பஞ்சபூத தலங்களில் நீருக்குரியது திருவானைக்காவல்.

* உயிர்களைக் காப்பதற்காக சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம்.

* ஆதிசங்கரர் நிறுவிய முக்திலிங்கம் கேதார்நாத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us