ADDED : நவ 16, 2021 02:19 PM

அ நிறம் | அளவு
* ஐயப்பன் வரலாற்றைச் சொல்லும் புராணம் பூதநாத புராணம்.
* ஐயப்பன் பூலோகத்தில் மனிதனாக வாழ்ந்த காலம் 12 ஆண்டுகள்.
* பந்தள மன்னர் ராஜசேகரபாண்டியன் ஐயப்பனுக்கு இட்ட பெயர் மணிகண்டன்
* ஐயப்பன் அவதரித்த நாள் பங்குனி உத்திரம் (சனிக்கிழமை).
* மணிகண்டன் தெய்வக்குழந்தை என்ற உண்மையை பந்தள மன்னருக்கு உணர்த்திய முனிவர் அகத்தியர்.
* பாவம் நீங்க ஐயப்பன் மீது பாடப்படுவது பறகொட்டி பாட்டு.
* நடை சாத்தும் போது ஐயப்பனுக்கு பாடுவது ஹரிவராசனம்.
* ஹரிவராசனம் பாடலைப் பாடியவர் கம்பக்குடி களத்துார் ஐயர்.
* பரசுராமர் 12 ஐயப்பன் கோயில்களை பிரதிஷ்டை செய்தார்.
* ஐயப்பனின் வலது கையால் காட்டுவது சின்முத்திரை.
