ADDED : ஜூலை 02, 2023 09:31 AM

* சிறிய வீடாக இருந்தாலும் துளசிச் செடியை வளர்த்துப் பராமரியுங்கள். குடும்பத்தினர் உடல்நலத்துடன் வாழ்வர்.
* எரியும் விளக்கு, கற்பூரத்தை வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
* அனுமனுக்கு தயிர் சாதம் படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.
* பிறந்த குழந்தையின் தலைமுடி முதன் முதலாக அகற்றப்படும் வரை, குழந்தையின் தலையை சீப்பால் வாரக்கூடாது.
* தொழில் செய்யும் இடத்தில் தண்ணீர் நிரம்பிய கண்ணாடிக் குவளையில் ஓர் எலுமிச்சம்பழத்தை வைத்தால் நல்லது.
* குழந்தை பிறந்து ஐந்து மாதம் முடியும் முன்னும், அன்னப்ரசனம் (சாதம் ஊட்டுதல்) நிகழ்ச்சி செய்யாமலும் குழந்தைக்கு சாதம் ஊட்ட ஆரம்பிக்க கூடாது. அதுவரை மற்ற ஆஹாரங்களை கொடுக்கலாம்.
* காகம், புறா, சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்கு தானியம் வைத்தால் புண்ணியம் சேரும்.
* துக்கம் விசாரிக்க செல்பவர்கள் கழுத்தில் ருத்ராட்சம்,
ஸ்படிக மாலைகளை அணியக் கூடாது.
* வாழைத்தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குழந்தைகள் உங்களது சொல்படி கேட்டு நடப்பர்.
* வீட்டில் வாசல் கதவுக்கு நேராக கால்களை நீட்டியோ, தலை வைத்தோ படுக்கக்கூடாது.

