sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 25, 2023 10:49 AM

Google News

ADDED : ஆக 25, 2023 10:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பகலும் இரவும் சேரும் நேரம் (சூரிய அஸ்தமனம்), இரவும் பகலும் சேரும் நேரம் (சூரிய உதயம்) ஸந்தியா காலம் எனப்படும். ஸந்த்யா என்றால் சேர்க்கை எனப்பொருள். இந்நேரம் மஹாலட்சுமிக்கு உரியது என்பதால், இதில் விஷ்ணு, லலிதா ஸஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரங்களை சொல்லலாம்.

* அந்தணர்கள் தான் கற்றுக்கொண்ட வேதத்தை தினமும் சிறிதளவாவது சொல்வதற்கு பிரம்ம யக்ஞம் என்று பெயர்.

* வீட்டு வாசல் (நிலை)படி, பிரதானமான வாசல் கதவு, கூரை இல்லாமலும், வாஸ்து முதலான தேவதைகளுக்கு பலியிடாமலும், உறவினர்களை அழைத்து விருந்து அளிக்காமலும் கிரஹ பிரவேசம் செய்யக்கூடாது.

* விரதம் இருக்க முடியாதவர்கள், தர்மம் செய்ய இயலாதவர்கள் காசி, ராமேஸ்வரம் போன்ற புனித தலங்களுக்கு செல்லலாம்.

* மந்திரங்களின் தாய் என்ற பெருமையைக் கொண்டது காயத்ரி மந்திரம். 'மந்திரங்களில் நான் காயத்ரி' என கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். இதை ஜபித்தால் நல்ல அறிவு உண்டாகும்.

* உபநயனம் ஆகாத (பூணுால் போடாத) பிரம்மச்சாரி பையனுக்கும், திருமணம் ஆகாத பெண் குழந்தைகளுக்கும் ஒருபோதும் எந்தத் தீட்டும் கிடையாது.

* வெவ்வேறு நட்சத்திரங்களை கொண்டவர்கள் திருமணம் செய்வது சிறப்பு. இருந்தாலும் ரோகிணி, திருவாதிரை, மகம், விசாகம், பூசம், திருவோணம், ரேவதி, உத்திரட்டாதி ஆகிய எட்டு நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் என இருவரும் திருமணம் செய்யலாம்.

* புண்ணிய நதிகளில் நீராடிய பிறகு வீட்டிற்கு வந்து குளிக்கக் கூடாது. அப்படி செய்தால் புண்ணியபலன் முழுமையாக கிடைக்காது.






      Dinamalar
      Follow us