ADDED : ஜூன் 03, 2011 09:49 AM
1. 'தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்
2. 'தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்
3. பஞ்சாமிர்த வண்ணம் பாடி முருகனை அபிஷேகித்தவர்...
பாம்பன் சுவாமிகள்
4. திருத்தணி முருகனை கண்ணாடியில் தரிசித்த அருளாளர்....
வள்ளலார்
5. 'பயந்த தனிவழிக்குத் துணை முருகா' என்று வழிகாட்டியவர்.....
அருணகிரிநாதர்
6. ராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தவர்...
திருக்கோஷ்டியூர் நம்பிகள்
7. திருமாலின் சாரங்க வில்லின் அம்சமாக அவதரித்தவர்.....
திருமங்கையாழ்வார்
8. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்
9. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்
10. ஐந்தாம் வேதமாகக் கருதப்படும் பாரதத்தைப் பாடியவர்...
வியாசர்

