ADDED : மே 28, 2010 11:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. மாரியம்மனாக வழிபடப்படும் ரிஷிபத்தினி....
ஜமதக்னி ரிஷியின் மனைவியான ரேணுகாதேவி.
2. கண்ணன் ....பாம்பின் மீது நடனம் ஆடினார்
காளிங்கன்
3. தேவர்களின் குருவாக இருப்பவர்...
பிருகஸ்பதி (வியாழன்)
4. குதிரை முகம் கொண்ட பெருமாள்...
ஹயக்ரீவ மூர்த்தி
5. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)
6. விநாயகர் மீது சங்கரர் பாடிய பாடல்...
கணேச பஞ்சரத்னம்
7. வள்ளலாருக்கு அண்ணியாக வந்து சோறிட்ட அம்மன்...
திருவொற்றியூர் அம்மன்
8. சூரியனின் அம்சமாக குந்திக்கு பிறந்த பிள்ளை...
கர்ணன்
9. குடத்தில் இருந்து பிறந்ததால் அகத்தியரை ...என்பர்
கும்பமுனிவர்(கும்பம் என்றால் குடம்)
10. பாற்கடலைக் கடைந்த மலையைத் தாங்க விஷ்ணு எடுத்த அவதாரம்...
கூர்மாவதாரம் (ஆமையாகி மலையைத் தாங்கினார்)