sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அர்ச்சனைப் பூக்கள்

/

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள்


ADDED : மே 28, 2010 11:04 AM

Google News

ADDED : மே 28, 2010 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்த வார ஸ்லோகம்

ப்ரணம்ய ஸிரஸா தேவம் கௌரீ புத்ரம் விநாயகம்!

பக்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு: காமார்த்த ஸித்தயே!!

பொருள்: தீர்க்காயுள், விருப்பம், செல்வவளம் ஆகியவற்றை அருளும் பார்வதியின் மைந்தனும், தூய்மையான பக்தர்களின் நெஞ்சில் வசிப்பவருமான விநாயகப்பெருமானை தினமும் வணங்குகிறேன்.

மனப்பாடப் பகுதி

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்

வெற்றிமுகத்து விநாயகனைத் தொழப் புத்தி மிகுத்து வரும்

வெள்ளைக்கொம்பன் விநாயகனைத் தொழத்

துள்ளியோடும் தொடர்வினைகளே!

அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய

தொப்பையப்பனைத் தொழ வினையறுமே.

பொருள்: யானைமுகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வு சிறக்கும். வெற்றிமுகம் கொண்ட அப்பெருமானை வழிபடுவோருக்கு நல்ல புத்தி உண்டாகும். வெள்ளை நிறம் கொண்ட தந்தத்தையுடைய அவர், நம்மைத் தொடரும் தீவினைகளைப் போக்கி அருள்வார். தொப்பையப்பனாகிய விநாயகப்பெருமானுக்கு இனிமையான அப்பம், மா,பலா, வாழைப்பழங்கள், அன்னம் ஆகியவற்றைப் படைத்து வழிபட நம் வினைகள் வேரோடு அகன்றுவிடும்.






      Dinamalar
      Follow us