ADDED : மே 21, 2010 03:16 PM
வீரமூட்டுகிறார் விவேகானந்தர்
* தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் ஒரு நாட்டின் நிலையும் உயரும். உயர்வதற்கான எல்லா ஆற்றலும், உதவியும் நமக்குள்ளே இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்தால் உயரலாம்.
* நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புங்கள். உள்ளத்தில் உறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றுப் போகும்.
* நம்மால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக சேவை செய்ய மட்டுமே முடியும்.
* எண்ணத்தில் பலமும், உள்ளத்தில் தைரியமும் பெற்றிருப்பவர்கள், உலக நன்மைக்காக தங்களைத் தியாகம் செய்து கொள்வார்கள்.
* உற்சாகத்துடன் கடமைகளைச் செய். ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான முதல் அறிகுறியே உற்சாகமாக இருப்பது தான்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகத்தின் நோக்கம்.
* மனத்தூய்மை முழுமையாக இருக்குமானால், உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமான வலிமையை நாம் பெற முடியும்.