நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:!
லிப்யதே ந ஸ பாபேந பத்ம பத்ர மிவாம்பஸா!!
காயேந மநஸா புத்த்யா கேவலைரிந்த் ரியைரபி!
யோகிந கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம ஸுத்தயே!!
பொருள்: பலனை கடவுளுக்கு அர்ப்பணித்து, பற்று இல்லாமல் வாழ்பவனை பாவம் சேராது. நான் என்னும் எண்ணம் இல்லாமல், துாய மனதுடன் பணி செய்பவனே கர்மயோகி.