ADDED : அக் 29, 2021 04:59 PM

அ நிறம் | அளவு
* ஒரு உயிரை கொன்று சாப்பிடாமல் இருப்பதே விரதம்.
* பெற்றோரே கண்கண்ட தெய்வம்.
* கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
* குடும்ப வாழ்க்கையே நன்மை தரும்.
* ஊராரை பகைத்துக் கொள்ளாதே.
* பிச்சை எடுத்தாவது நல்லதை செய்.
* சிக்கனமாக இருந்து செல்வத்தை தேடு.
* உனக்கு கிடைக்காததை மறந்து விடு.
* கடல் கடந்தாவது பொருள் தேடு.
* சிறந்த உணவாக இருந்தாலும் காலம் அறிந்து சாப்பிடு.
* கொடுத்த வாக்கை காப்பாற்று.
* உன்னை விட தாழ்ந்தவரிடமும் அன்பாக பேசு.
* வரவு அறிந்து செலவு செய்.
* சிறிய செயலாக இருந்தாலும் யோசித்து செய்.
* தெரிந்தும் தெரியாது மாதிரி இருப்பதே பெண்களுக்கு அழகு.
* நிதானமாக ஒரு செயலை செய்.
* தினமும் காலை எழுந்தவுடன் கடவுளை வணங்கு.
விளக்கம் தருகிறார் அவ்வையார்
