
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யஸ்ய அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே.
பொருள்: பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதம் ஆகும் என்பதால் தூணில் இருந்து உடனே வந்தவனே! லட்சுமி நரசிம்மனே! உன்னைச் சரணடைகிறேன். என்னைக் காப்பாற்றுவாயாக!
குறிப்பு: இந்த ஸ்லோகத்தை படித்தால் கைவிட்டுப் போனது கூட நடந்து விடும்.