sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

வரலெட்சுமி விரத தகவல்கள்

/

வரலெட்சுமி விரத தகவல்கள்

வரலெட்சுமி விரத தகவல்கள்

வரலெட்சுமி விரத தகவல்கள்


ADDED : ஜூலை 31, 2020 01:23 PM

Google News

ADDED : ஜூலை 31, 2020 01:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். இதனால் கோயில்களில் காலையில் கோபூஜை செய்தபின்னரே சுவாமி தரிசனம் ஆரம்பமாகும்.

* லட்சுமியின் அம்சம் துளசி. வீட்டில் துளசி மாடம் வைத்து சுற்றி வந்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

* வாழை, மாவிலை, எலுமிச்சம்பழங்களில் மகாலட்சுமி வசிக்கிறாள்.

* மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். இப்பிறவியில் செல்வ வளமும், பிறவி முடிந்த பின் மோட்சமும் தருபவள்.

* லட்சுமிக்கு விருப்பமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.

* தலைமுடியின் முன் வகிட்டில் லட்சுமி இருப்பதால் மணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்வர்.

* லட்சுமியின் அம்சமான நீரும், உப்பும் வீட்டில் குறைவின்றி இருக்க வேண்டும்.

* நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி செல்வத்தை வழங்குகிறாள்.

* மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.

* அனைவருக்கும் நன்மை தருபவள் என்று மகாலட்சுமி குறித்து அதர்வண வேதம் சொல்கிறது.

* வரலட்சுமி பூஜையன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்யம் செய்ய வேண்டும்.

* வரலட்சுமி பூஜையில் அருகம்புல்லை துாவி வழிபட்டால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

* சந்தனத்தில் லட்சுமி செய்து பூஜை செய்யலாம். ஆனால் மறுநாள் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.

* வரலட்சுமி பூஜையன்று புனித நதிகளில் நீராடினால் ஓராண்டு லட்சுமியை பூஜித்த புண்ணியம் கிடைக்கும்.

* சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.

* வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

* மகாலட்சுமியை பூஜித்த இந்திரன் அஷ்ட ஐஸ்வர்யம், ஐராவதம் என்னும் யானை, அமராவதி நகரத்தை பெற்றார்.

* பூரணகும்பம், மஞ்சள் குங்குமம், திருமண் சூர்ணம், கோலம் சந்தனம், வாழை மாவிலை தோரணம் வெற்றிலை, திருவிளக்கு யானை, பசு, கண்ணாடி உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி தங்கியிருக்கிறாள்.

* மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்காததால் சஞ்சலா, சபலா என்ற பெயர்கள் அவளுக்கு உண்டு

* வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, பாதாள உலகில் நாக லட்சுமியாக மகாலட்சுமி இருக்கிறாள்.

* மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்பவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

* லட்சுமியை வழிபட்டால் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், புகழ் உண்டாகும்.






      Dinamalar
      Follow us