sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

12 படியுங்கள் ஜெயித்துக்காட்டுங்க!

/

12 படியுங்கள் ஜெயித்துக்காட்டுங்க!

12 படியுங்கள் ஜெயித்துக்காட்டுங்க!

12 படியுங்கள் ஜெயித்துக்காட்டுங்க!


ADDED : ஆக 27, 2013 12:44 PM

Google News

ADDED : ஆக 27, 2013 12:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு ராஜகுமாரன் லட்சுமிதேவியை வேண்டி தவமிருந்தான். தேவியும் பிரசன்னமாகி, ''மகனே! என்ன வரம் வேண்டும், கேள்,'' என்றாள்.

''அம்மா! என் தந்தை பெரிய சக்கரவர்த்தி. உலகம் அனைத்தையும் பிடிப்பதற்காக, ராஜதர்மத்தின் படி, அஸ்வமேத யாகம் நடத்தினார். யாகம் நடக்கும் வேளையில், அவர் இறந்து விட்டார். நான் பதவிப்பொறுப்பேற்று, யாகத்தைத் தொடர்ந்தேன். அப்போது அனுப்பிய குதிரையை யாரோ திருடிச் சென்று விட்டனர். அதைக் கண்டுபிடித்து தர வேண்டும். யாகம் வெற்றியடைய வாழ்த்த வேண்டும்,'' என்றான்.

லட்சுமியும் அவ்வாறே அருளி,''நீ இவ்வூர் எல்லையில் இருக்கும் மகானைப் பார். அவர் உனக்கு வழிகாட்டுவார்,'' என்றாள்.

ராஜகுமாரனும் மகானைச் சந்தித்தான். அவர் தன் ஞானசக்தியால், குதிரை இந்திரனிடம் இருப்பதை அறிந்து, சக்திமிக்க சீடர்களை அனுப்பி அதைக் கொண்டு வந்து விட்டார்.

அவரது மகிமையை அறிந்த ராஜகுமாரன், ''முனிவரே! என் தந்தையின் உடலை தைலங்கள் இட்டு பாதுகாத்து வைத்துள்ளேன். அவரை உயிரோடு எழுப்பினால், அவரது அஸ்வமேத யாகக்கனவு பலித்து விடும், தாங்கள் அருள்வீர்களா?'' என பணிவுடன் கேட்டான்.

அவன் கேட்டபடியே சக்கரவர்த்தியை உயிருடன் எழுப்பினார் மகான்.

ராஜகுமாரன் அவரிடம், ''முனிவரே! இந்த சக்தி தங்களுக்கு எப்படி கிடைத்தது?'' என்று கேட்டான்.

''மகனே! கீதையின் பன்னிரண்டாவது அத்தியாயத்தைப் படிக்கும் யாரும் நினைத்ததை அடையலாம், ஜெயித்துக் காட்டலாம்,'' என்றார்.

வீட்டுக்கு வீடு இனி கீதை புத்தகம் இருக்கும் தானே!






      Dinamalar
      Follow us