sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பார்வை ஒன்றே போதுமே...

/

பார்வை ஒன்றே போதுமே...

பார்வை ஒன்றே போதுமே...

பார்வை ஒன்றே போதுமே...


ADDED : மார் 25, 2022 11:24 AM

Google News

ADDED : மார் 25, 2022 11:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடமாடும் தெய்வமான காஞ்சி மஹா பெரியவரின் உபதேசங்களை 'தெய்வத்தின் குரல்' என்னும் ஏழு புத்தகங்களாக தொகுத்தவர் ரா.கணபதி. இளம்பருவத்தில் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார், அவரை மாற்றியது யார் என்பதை கீழே காண்போம்.

1957ல் மஹாபெரியவர் காஞ்சிபுரம் அருகிலுள்ள ஓரிக்கையில் முகாமிட்டு இருந்தார். கணபதியின் பெற்றோர் ஓரிக்கைக்கு பெரியவரை தரிசிக்க வந்தனர்.

பெற்றோரின் வற்புறுத்தலால் கடவுள் நம்பிக்கை இல்லாத கணபதியும் வந்தார். வந்த இடத்தில் சட்டையை கழற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறதே என சங்கடப்பட்டார். ஆனால் மஹாபெரியவர் மீது பக்தி கொண்ட தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளானார். அப்போது மாலை 5:30 மணி. தரிசனம் முடித்து ஏழு மணிக்குள் ஸ்ரீபெரும்புதுார் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் கணபதியின் குடும்பத்தினர் இருந்தனர்.

விழுப்புரத்தில் மஹாபெரியவர் வாழ்ந்த போது, அவரது பால்ய நண்பர்களில் கணபதியின் பெரிய தாத்தா துரையப்பாவும் ஒருவர். சிறுவயதில் துரையப்பாவின் வீட்டில் மஹாபெரியவரும், அவரது மற்றொரு நண்பரான ராஜாவும் மாலையில் விளையாடுவர். அப்போது கணபதியின் பாட்டி இரவு உணவை மூவருக்கும் அவர் கையால் பிசைந்து கொடுப்பார். இந்த நிகழ்வுகளை நேரம் கிடைத்தால் மஹாபெரியவரிடம் கேட்க வேண்டும் என்ற ஆவலுடன் கணபதியின் தந்தை ராமச்சந்திரன் காத்திருந்தார். ஆனால் நேரமின்மையால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது.

இந்த சூழலில் வெளிச்சமில்லாத இடத்தில் மஹாபெரியவர் அமர்ந்திருக்க, பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்றனர். அங்கிருந்த தொண்டர் ஒருவர், பக்தர்களின் பெயர், ஊரைச் சொல்லி மஹாபெரியவருக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின் முறை வந்ததும், பெற்றோருடன் கணபதியும் வேறு வழியின்றி அவரது காலில் விழுந்தார். மகானைக் கண்ட மகிழ்ச்சியில் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட, கணபதியின் மனமோ எதிர்மறையாக சிந்தித்துக் கொண்டு இருந்தது.

பெரியவரோ வைத்த கண் வாங்காமல் கணபதியைப் பார்க்க, அந்த பார்வையின் ஆழத்தை உணரும் பக்குவம் அவருக்கு இல்லை.

ஆன்மிக எழுத்தாளராக, சிந்தனையாளராக, கணபதியை மாற்றுவதே பெரியவரின் நோக்கம்.

வருங்கால தலைமுறையினருக்கு தன் உபதேசங்களை தொகுத்து வழங்க இவரே சரியானவர் என முடிவுக்கு வந்தார் அந்த மகான்.

தன்னை ஏன் இப்படி பார்க்கிறார் என சிந்தித்தபடி வீட்டிற்கு புறப்பட்டார். மஹாபெரியவரை ஏன் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறி, அருட்பார்வையால் அவரை பண்படுத்தியதால் மகானை தரிசிப்பதை தவிர வேறு வேலை இல்லை என்ற எண்ணம் கணபதிக்கு ஏற்பட்டது.

மஹாபெரியவரை நினைக்கவே மனம், பார்க்கவே கண்கள், வணங்கவே தலை இருக்கிறது என்னும் முடிவுக்கு வந்தார். மனஅழுக்குகளை போக்கும் சக்தி அவரது பார்வைக்கு இருப்பதால், அவரது அருள் நாமும் பெற கிடைக்க வேண்டுவோம்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com






      Dinamalar
      Follow us