sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

எல்லாம் உனக்காக!

/

எல்லாம் உனக்காக!

எல்லாம் உனக்காக!

எல்லாம் உனக்காக!


ADDED : ஜூலை 02, 2014 04:13 PM

Google News

ADDED : ஜூலை 02, 2014 04:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சீடன் ஒருவன், ''குருவே! கடவுளை அடைய நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?'' என கேட்டான்.

குரு அவனிடம், ''வேகமாக ஓடு! ஆனால், அதற்கு முன் கடவுளே! உனக்கா கவே ஓடுகிறேன் என்று எண்ணிக் கொள்,'' என்றார்.

''என்ன குருவே! கடவுளை அடைய வழி கேட்டால் ஓடச் சொல்கிறீர்களே! ஏன் உட்கார்ந்து கொண்டு ஏதாவது செய்ய வழியில்லையா?'' என்றான்.

''ஏன் இல்லை? தாராளமாகச் செய்யலாம். ஆனால், உட்காருவதற்கும் நிபந்தனை உண்டு. கடவுளே! உனக்காகவே உட்காருகிறேன் என்ற எண்ணியபடி உட்கார். அவ்வளவு தான்!'' என்றார்.

''ஓடிக் கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருந்தால் போதுமா? ஜபம், தவம் ஏதும் தேவையில்லையா?'' என்று கேட்டான்.

''தாராளமாய் செய்யலாம். ஆனால், ஒன்றை நினைவில் வை. கடவுளே! இவற்றையும் உனக்காகவே செய்கிறேன் என்று சொல்,'' என்றார் குருநாதர்.

'' அப்படியானால், கடவுளுக்காக இதைச் செய்கிறேன் என்னும் கருத்து தான் இங்கு முக்கியமாகிறது. செயலை விட கடவுளுக்கு அர்ப்பணம் என்பது தான் முக்கியமா?'' என்றான் சீடன்.

''செயலும் அவசியம் தான். செயல் இல்லாவிட்டால், மனதில் இவ்வகை பாவனையே தோன்றாது. எப்போது எண்ணமும், செயலும் ஒன்றுபடுகிறதோ, அப்போதுதான் எதுவும் முழுமையடையும். கடவுள் விஷயத்தில் இது மிக மிக அவசியம்,'' என்றார் குரு.






      Dinamalar
      Follow us