sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

குடியிருக்கும் கோயில்

/

குடியிருக்கும் கோயில்

குடியிருக்கும் கோயில்

குடியிருக்கும் கோயில்


ADDED : ஜூலை 11, 2025 08:52 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 08:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன்னருக்கு ஒரு சந்தேகம் வர மந்திரியை வரவழைத்தார்.

'' கடவுளை நேரில் நான் பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு'' என உத்தரவிட்டார் மன்னர். புரியாமல் விழித்தார் மந்திரி.

''ஒரு மாதம் அவகாசம் அளிக்கிறேன். அதற்குள் ஏற்பாடு செய்யாவிட்டால் உமக்கு தண்டனை அளிப்பேன்'' என எச்சரித்தார். நாடெங்கும் செய்தி பரவியது.

''கடவுள் வைகுண்டத்தில் இருக்கிறார், கயிலாயத்தில் இருக்கிறார், சூரிய மண்டலத்தில் இருக்கிறார், வேதங்களில் மறைந்திருக்கிறார்'' என பண்டிதர்கள் ஆளுக்கொரு விளக்கம் அளித்தனர். ஆனால் யாரும் கடவுளைக் காட்ட முன்வரவில்லை.

கெடு முடிய இருந்ததால் மந்திரி குழப்பத்தில் தவித்தார். மந்திரியை விடுவிக்க எண்ணிய அவரது மகள்(சிறுமி) அரண்மனைக்கு புறப்பட்டாள்.

'' மன்னா! கடவுளின் இருப்பிடத்தை காட்டினால் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிப்பதாக கேள்விப்பட்டேன்! அதற்கு முன்னதாக கடவுள் இல்லாத இடத்தை நீங்கள் காட்டுங்கள்'' என்றாள்.

மவுனமாக இருந்தார் மன்னர்.

'' மன்னா! எங்கும் நிறைந்தவர் கடவுள் என்றாலும் தவத்தில் சிறந்த ஞானிகளால் மட்டுமே அவரைக் காண முடியும்.

புலன்களை அடக்கிய அவர்களின்மனமே கடவுள் குடியிருக்கும்கோயில்'' என்றாள். தவத்தின்

மேன்மை அறிந்த மன்னர் தானும் தவத்தில் ஈடுபட முடிவு செய்தார்.






      Dinamalar
      Follow us