ADDED : ஜூலை 11, 2025 09:02 AM

செல்வம் அருளும் க்ஷிப்ரப்ரஸாத கணபதி
எனில் இறைவனின் அருள் என்று பொருள். க்ஷிப்ர என்பதற்கு வி பிரசாதம் கே. பொருள். அடியார்கள் வேண்டுவதை விரைந்து தந்து அருள் செய்பவர் இ இதை உணர்த்தும் வகையில் இவர்தம் ஆறு திருக்கரங்களில் ஒன்றில், வி சிறப்புடைய கற்பகக் கொடியை ஏந்தியவராய், திருமுடியில் பிறைமத எழுந்தருளியிருக்கிறார்.
தியான சுலோகம்
த்ருதபாசாங்குச கல்பலதா ஸ்வதந்த ஸ்ச பீஜபூர யுத:
சசிசகல கலிதமௌளி: த்ரிலோசந அருணஸ்ச கஜவதந: |
பாஸுர பூஷண தீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்ட ரோல்லஸித:
விக்ந பயோதர பவந: கரத்ருத கமலஸ் ஸதாஸ்து மே பூத்யை ||
பாசாங்குச - பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களையும்
கல்பலதா - கற்பகக் கொடியையும்
ஸ்வதந்த ஸ்ச - தனது ஒடித்த தந்தத்தையும்
பீஜபூரயுத: - மாதுளம் பழத்தையும்
த்ருத - தலையில் தாங்கியிருக்கிற
சசிசகல - பிறைத் துண்டத்துடன்
கலிதமௌளி: - விளங்குகின்ற திருமுடியை உடையவரும்
த்ரிலோசந: - முக்கண்ணரும்
அருணஸ்ச - சிவந்த நிறத் திருமேனியரும்
கஜவதந: - யானை முகம் கொண்டவரும்
பா'ஸுர - ஒளிவீசுகின்ற ரத்தினங்களால் ஆன
பூஷண - அணிந்துள்ள ஆபரணங்களால்
தீப்தோ - பிரகாசிப்பவரும்
ப்ருஹது'த'ர: - பெருவயிற்றை உடையவரும்
பத்ம - தாமரை மலராகிய
விஷ்டர - இருக்கையில்
உல்லஸித: - வீற்றிருப்பவரும்
விக்ந பயோதர - தடை எனும்
பவந: - மேகக் கூட்டத்தை விரட்டும் புயல் காற்றாய் உள்ளவரும்
கரத்ருத கமல: - கையில் ஏந்திய தாமரையை உடையவருமான இந்த கணபதியானவர்
ஸதா - எப்போதும்
மே - எனக்கு
பூத்யை - செல்வத்தை வழங்குபவராக
அஸ்து - விளங்கி இருக்கட்டும். (செல்வமளிக்கட்டும்).
பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.
கற்பகக் கொடி: தேவலோக அதிசயமான கற்பகமரம் போல, அடியவர்களுக்கு வேண்டுவதை அருள்பவர் என்பதைக் காட்டுகிறது.
ஒடித்த தந்தம்: நிறத்தால் துாய்மையையும் ஆயுதமாக ஏந்தியதால் மனஉறுதியையும் கொண்டு, செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது
அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது.
மாதுளம் பழம்: இப்பழத்தின் விதை, படைப்பையும் ஒடுக்குவதையும் சுட்டுவது.
செந்தாமரை: ஞானம், ஆரோக்கியத்தை குறிப்பது.
பலன்: விரும்பிய பயன் விரைவில் கிடைக்கும்; தடை நீங்கும்; செல்வம் பெருகும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்