sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 20

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 20

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 20

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 20


ADDED : ஜூலை 11, 2025 09:02 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 09:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்வம் அருளும் க்ஷிப்ரப்ரஸாத கணபதி

எனில் இறைவனின் அருள் என்று பொருள். க்ஷிப்ர என்பதற்கு வி பிரசாதம் கே. பொருள். அடியார்கள் வேண்டுவதை விரைந்து தந்து அருள் செய்பவர் இ இதை உணர்த்தும் வகையில் இவர்தம் ஆறு திருக்கரங்களில் ஒன்றில், வி சிறப்புடைய கற்பகக் கொடியை ஏந்தியவராய், திருமுடியில் பிறைமத எழுந்தருளியிருக்கிறார்.



தியான சுலோகம்

த்ருதபாசாங்குச கல்பலதா ஸ்வதந்த ஸ்ச பீஜபூர யுத:

சசிசகல கலிதமௌளி: த்ரிலோசந அருணஸ்ச கஜவதந: |

பாஸுர பூஷண தீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்ட ரோல்லஸித:

விக்ந பயோதர பவந: கரத்ருத கமலஸ் ஸதாஸ்து மே பூத்யை ||

பாசாங்குச - பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களையும்

கல்பலதா - கற்பகக் கொடியையும்

ஸ்வதந்த ஸ்ச - தனது ஒடித்த தந்தத்தையும்

பீஜபூரயுத: - மாதுளம் பழத்தையும்

த்ருத - தலையில் தாங்கியிருக்கிற

சசிசகல - பிறைத் துண்டத்துடன்

கலிதமௌளி: - விளங்குகின்ற திருமுடியை உடையவரும்

த்ரிலோசந: - முக்கண்ணரும்

அருணஸ்ச - சிவந்த நிறத் திருமேனியரும்

கஜவதந: - யானை முகம் கொண்டவரும்

பா'ஸுர - ஒளிவீசுகின்ற ரத்தினங்களால் ஆன

பூஷண - அணிந்துள்ள ஆபரணங்களால்

தீப்தோ - பிரகாசிப்பவரும்

ப்ருஹது'த'ர: - பெருவயிற்றை உடையவரும்

பத்ம - தாமரை மலராகிய

விஷ்டர - இருக்கையில்

உல்லஸித: - வீற்றிருப்பவரும்

விக்ந பயோதர - தடை எனும்

பவந: - மேகக் கூட்டத்தை விரட்டும் புயல் காற்றாய் உள்ளவரும்

கரத்ருத கமல: - கையில் ஏந்திய தாமரையை உடையவருமான இந்த கணபதியானவர்

ஸதா - எப்போதும்

மே - எனக்கு

பூத்யை - செல்வத்தை வழங்குபவராக

அஸ்து - விளங்கி இருக்கட்டும். (செல்வமளிக்கட்டும்).

பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.

கற்பகக் கொடி: தேவலோக அதிசயமான கற்பகமரம் போல, அடியவர்களுக்கு வேண்டுவதை அருள்பவர் என்பதைக் காட்டுகிறது.

ஒடித்த தந்தம்: நிறத்தால் துாய்மையையும் ஆயுதமாக ஏந்தியதால் மனஉறுதியையும் கொண்டு, செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது

அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது.

மாதுளம் பழம்: இப்பழத்தின் விதை, படைப்பையும் ஒடுக்குவதையும் சுட்டுவது.

செந்தாமரை: ஞானம், ஆரோக்கியத்தை குறிப்பது.

பலன்: விரும்பிய பயன் விரைவில் கிடைக்கும்; தடை நீங்கும்; செல்வம் பெருகும்.



அருள் தொடரும்...

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்






      Dinamalar
      Follow us