sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பிடிசோறு போதும்

/

பிடிசோறு போதும்

பிடிசோறு போதும்

பிடிசோறு போதும்


ADDED : ஆக 21, 2025 02:03 PM

Google News

ADDED : ஆக 21, 2025 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் செல்வந்தன் நானே என தற்பெருமை கொண்டான் குபேரன். அதை நிலைநாட்ட கைலாயம் சென்ற அவன், சிவபெருமானைத் தன் அரண்மனைக்கு விருந்துண்ண அழைத்தான். அவனது எண்ணம் அறிந்த சிவன் ''இப்போது என்னால் வர இயலாது. என் மூத்தபிள்ளை விநாயகரை உன்னுடன் அழைத்துச் செல். அவன் திருப்தி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சியே'' என்றார்.

விநாயகரும் குபேரனுடன் புறப்பட்டார். அங்கு இலையில் பரிமாறிய உணவை எல்லாம் விருப்பமுடன் சாப்பிட்டார். ஆனால் அவருக்கு வயிறு நிரம்பவில்லை. அரண்மனையில் உள்ளவர்களுக்காக இருந்த உணவும் கூட காலியானது. அப்போதும் பசி அடங்கவில்லை.

இப்படியே போனால் எதுவும் மிஞ்சாது என்ற நிலையில் விநாயகர், ''என்னை திருப்திப்படுத்தினால் தான் என் தந்தை மகிழ்வேன் என்றாரே... ஆனால் எனக்கோ பசி தீர்ந்தபாடில்லை. அதனால் உன்னையே கொன்று தின்னப் போகிறேன்'' என துதிக்கையை நீட்டினார்.

பயத்தில் முகம் வெளிறிய குபேரன் கைலாயம் நோக்கி ஓடினான். சிவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவன் '' பயப்படாதே... உன் ஆணவத்தை கைவிட்டு கைப்பிடி சோறு கொடுத்தாலும் போதும். விநாயகரின் பசியடங்கி விடும்'' என்றார். தவறை உணர்ந்த குபேரன் கை குவித்து வணங்கினான்.

பணிவுடன் பிடி சோற்றை விநாயகருக்கு அளித்ததும் அவரது பசியடங்கியது.






      Dinamalar
      Follow us