sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 14

/

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 14

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 14

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 14


ADDED : மே 30, 2025 08:35 AM

Google News

ADDED : மே 30, 2025 08:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெற்றி அருளும் விஜய கணபதி

தடைகளை நீக்கி இறையருளோடு கூடிய வெற்றியை அருளுவதால் இவர் விஜய கணபதி என போற்றப்படுகிறார்.

தியான சுலோகம்

பாசாங்குச ஸ்வதந் தாம்ர பலவாந் ஆகு வாஹந: |

விக்நம் நிஹந்து நஸ் ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக: ||

பாசம் - பாசம் எனும் ஆயுதம்

அங்குச - அங்குசம் எனும் ஆயுதம்

ஸ்வதந்த - தனது ஒடித்த தந்தம்

ஆம்ர - மாம்பழம்

பலவாந் - இவற்றை ஏந்தியிருப்பவரும்

ஆகுவாஹந: - பெருச்சாளியை வாகனமாக உடையவரும்

ரக்தவர்ண: - குருதி போன்ற சிவந்த நிறம் கொண்டவருமாக

விநாயக: - தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத விநாயகராக (விளங்குபவர்)

ந: - எங்களுடைய (பக்தர்களுடைய)

ஸர்வம் விக்நம் - அனைத்து தடைகளையும்

நிஹந்து - அழிக்கட்டும்

பாசம், அங்குசம் : உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம்.

ஒடித்த தந்தம் : துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது.

பெருச்சாளி : உயிரை மூடியுள்ள ஆணவ மலத்தைக் குறிக்கும். சரணடையும் உயிரின் ஆணவத்தை அடக்கி வீடுபேற்றை அருள்பவர் கணபதி என்பதை உணர்த்துவது.

மாம்பழம் : இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

பலன் : வெற்றி கிட்டும்; பிறவாத நிலையான வீடுபேறு கிடைக்கும்.

அருள் தொடரும்

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்






      Dinamalar
      Follow us