சாஸ்திரத்திற்கு விரோதமாக யார் பேசினாலும், நடந்தாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட இரக்கம் கொண்டு, 'இன்று போய் நாளை வா' என்று சொல்லியவர் அவர். ஆனால் அவரையே கோபத்திற்கு உள்ளாக்கினார் ஜாபாலி ரிஷி.
''ராமா! மறைந்த பெற்றோருக்கு திதியன்று பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அது எப்படி சாத்தியம்? அதை பார்த்தவர்கள் யாரும் உண்டா? மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது...” என்றார் ஜாபாலி ரிஷி. இதைக் கேட்டதும் ராமனின் கண்கள் சிவந்தன.
''மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திர விரோதமாக பேசாதீர். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வேதம் தவறாகி விடுமே! எல்லாவற்றுக்கும் ஆதாரமானது வேதம்” என விளக்கினார். ஜாபாலி நடுங்கி விட்டார்.
''அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால் உன் வாயால் இந்த வார்த்தைகள் தெளிவாக வரட்டுமே என்று தான் உன்னை கோபமூட்டினேன். என்னை நாத்திகன் என எண்ணாதே” என்ற சொன்ன பின் ராமன் சமாதானம் ஆனான்.