sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதி

/

எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதி

எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதி

எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதி


ADDED : ஜூன் 10, 2013 03:04 PM

Google News

ADDED : ஜூன் 10, 2013 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகனின் நிலை கண்டு வருந்தினார் கூடலூர் வேதநாயகம் பிள்ளை. வள்ளலாரின் பக்தரான அவரது மகனுக்கு உடல் நலமில்லை.

வள்ளலாருக்கு மருத்துவ ஞானம் உண்டு என்பதும், அவர் அதிசயம் புரிந்தே நோய்களைக் குணமாக்குபவர் என்ற விபரமும் கூடலூராருக்கு தெரியாது.

அவர் கவலையில் ஆழ்ந்திருந்த நேரத்தில், வள்ளலாரே அங்கு வந்து விட்டார்.

''ஆ...வள்ளலார் என் வீட்டிற்கு வந்திருக்கிறாரா? கூடலூராரால் பேசக்கூட முடியவில்லை. அவரை அன்புடன் வரவேற்றார்.

''உன் மகன் எங்கே!'' என்று கேட்டபடியே, அவன் படுத்திருந்த அறைக்கு வந்தார் வள்ளலார். அவனது நிலையைச் சொல்லி கதறி அழுதார் வேதநாயகம் பிள்ளை.

''கவலைப்படாதே!'' என்ற வள்ளலார், திருநீறை எடுத்து அவன் உடலில் பூசினார். படுத்த படுக்கையாக கிடந்தவன் எழுந்து அமர்ந்தான். நோய் வந்த தடமே தெரியவில்லை. வேதநாயகம் பிள்ளை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரிடம் விடை பெற்றார் வள்ளலார்.

மறுநாள், வள்ளலார் தங்கியிருந்த வடலூருக்கு இருவரும் கிளம்பினர். அங்கிருந்தோரிடம் வள்ளலார் தங்கள் இல்லத்துக்கே வந்து, அதிசயம் நிகழ்த்தியதைக் கூறினர்.

அவர்கள் அதிர்ந்தார்கள். ''என்ன சொல்கிறீர்கள்! நேற்று வள்ளலார் வடலூரில் தான் தங்கியிருந்தார். உங்கள் இல்லத்துக்கு வரவில்லையே!'' என்றதும், பிள்ளை வள்ளலாரிடம் ஓடினார்.

''அது இறையருளால் நிகழ்ந்த விஷயம். அதை மற்றவர்களிடம் சொல்லி பெரிதுபடுத்தாதே'' என்று தன்னடக்கத்துடன் சொல்லி, அவரை ஆசிர்வதித்தார் வள்ளலார். எங்குமிருக்கும் அருட்பெருஞ்ஜோதியாக அவர் விளங்கினார்.






      Dinamalar
      Follow us